பாகிஸ்தானை இந்தியா மிரட்டுவது ஏன்? | India vs Pakistan | POK | India warns Pakistan | Rajnath Singh
அழிச்சிருங்க! இல்ல முடிச்சிருவோம் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை! POK-வில் என்ன நடக்குது? டிஸ்க்: ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் நடந்த 9வது ஆயுதப்படை தினத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்கள் முன்பு உரையாற்றிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் ஜம்மு காஷ்மீர் முழுமை பெறாது என்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: பாகிஸ்தானை பொறுத்தவரை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது அந்நிய நிலம். அங்கு தான் பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கம் முகாம்கள் அங்கு தான் செயல்படுகின்றன. எல்லா பயங்கரவாத முகாம்களையும் உடனடியாக பாகிஸ்தான் அழிக்க வேண்டும்.