உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கையுடன் உறவை மேம்படுத்த அரசு நடவடிக்கை Jaisankar Meets Srilankan President

இலங்கையுடன் உறவை மேம்படுத்த அரசு நடவடிக்கை Jaisankar Meets Srilankan President

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார். இலங்கையில் அந்நாட்டு வெளியுறவு செயலாளர் அருணி விஜயவர்த்தனே மற்றும் அதிகாரிகள் ஜெய்சங்கரை வரவேற்றனர். அதிபர் மாளிகைக்கு சென்ற ஜெய்சங்கர், அதிபர் அனுர குமார திசநாயகேவை சந்தித்தார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் திசநாயகேவை ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை உறவு குறித்து பேச்சு நடத்தினர். இலங்கையில் நிலவும் பொருளாதார மந்த நிலை, தொழில், வர்த்தகம் குறித்து அதிபர் திசநாயகே ஜெய்சங்கரிடம் விளக்கினார். இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவிகள், இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் உறவு மேம்பாடு குறித்து அதிபர் திசநாயகேவுடன் பேசியதாக ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை