/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாதத்தை கைவிடாத வரை சிந்து தண்ணீர் வராது india rejects pakistan talk| pm shehbaz sharif| indus
பயங்கரவாதத்தை கைவிடாத வரை சிந்து தண்ணீர் வராது india rejects pakistan talk| pm shehbaz sharif| indus
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, அந்த நாட்டுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் கைவிடும் வரை எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தது. இந்த சூழலில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தெஹ்ரானில் ஈரான் அதிபருடனான சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகவும் அவர் பேசியிருக்கிறார்.
மே 29, 2025