30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது | inspector arrest | bribe | Tenkasi
தென்காசி கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா. இவர் திருநெல்வேலி பணக்குடியை சேர்ந்த செல்வகுமாரிடம் ஆள் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தார். வழக்கை சீக்கிரம் முடிக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஒப்படைக்கவும் 30,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க ரசாயனம் தடவிய 30 ஆயிரத்தை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். போலீஸ் ஸ்டேஷனில் மேரி ஜெமீதாவிடம் அந்த பணத்தை அவர் வழங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மேரி ஜெமீதாவை கைது செய்தனர். தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.