ஓய்வு அறைக்குள் புகுந்து மர்ம நபர் வெறியாட்டம்
ஈரான் சுப்ரீம் கோர்ட் ஓய்வறைக்குள் நுழைந்து அங்கிருந்த 2 மூத்த நீதிபதிகளை சுட்டுக்கொன்ற கொலையாளி தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தான். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இந்த சம்பவத்தில் நீதிபதிகளின் மெய்க் காப்பாளரும் காயம் அடைந்தார். இந்த கொலைகளுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் அடங்கிய தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை கொல்லப்பட்ட நீதிபதிகள் விசாரித்து வந்தனர்.
ஜன 18, 2025