/ தினமலர் டிவி
/ பொது
/ மும்பை ஏர்போர்ட்டில் வேட்டையாடப்பட்ட 2 பயங்கரவாதிகள் | ISIS sleeper cell | NIA
மும்பை ஏர்போர்ட்டில் வேட்டையாடப்பட்ட 2 பயங்கரவாதிகள் | ISIS sleeper cell | NIA
இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத திட்டங்களை முறியடிக்கும் முயற்சியில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள இருவர் மும்பை ஏர்போர்ட் வருவதாக என்ஐஏக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் நடத்திய ரகசிய சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல் ஆக இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அப்துல்லா பைஸ் சேக் மற்றும் தல்ஹா கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே வெடிகுண்டு தயாரித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே 17, 2025