உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் உள்ளே புகுந்து இஸ்ரேல் கதகளி... வரப்போகும் பேரதிர்ச்சி | Israel vs Iran | Israel attacks Iran

ஈரான் உள்ளே புகுந்து இஸ்ரேல் கதகளி... வரப்போகும் பேரதிர்ச்சி | Israel vs Iran | Israel attacks Iran

காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவன் ஹனியேவை ஏற்கனவே கொலை செய்த இஸ்ரேல், புதிய தலைவனாக நியமிக்கப்பட்ட யாஹ்யா சின்வாரையும் தீர்த்துக்கட்டியது. இதற்கிடையில் ஹெஸ்புலாவின் உச்ச தலைவன் ஹசன் நஸ்ரல்லாவையும் சமீபத்தில் பெய்ரூட்டில் குண்டு வீசி கொலை செய்தது. இப்படி முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் கொலை செய்யும் படலம், ஹமாஸ், ஹெஸ்புலாவை வளர்க்கும் ஈரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக நஸ்ரல்லா கொலைக்கு பழிவாங்கும் விதமாக அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது. ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியது. பல ஏவுகணைகளை வானில் இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் சொன்னது. இருப்பினும் இஸ்ரேலின் மிகப்பெரிய விமானப்படை தளங்களில் ஒன்றான நேவாடிம் (Nevatim) விமானப்படை தளம் சேதம் அடைந்தது. இது தவிர இஸ்ரேலியர் ஒருவரும், பாலஸ்தீனியர் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஈரானின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவும் பார்க்கப்பட்டது. இதனால் இஸ்ரேல் பொங்கி எழுந்த இஸ்ரேல், ஈரானுக்கு இஸ்ரேல் கொடுக்கும் பதிலடியை எந்த காலத்திலும் அந்த நாடு மறக்காது என்று இஸ்ரேல் சூளுரைத்தது. அதன் பிறகு எந்த நேரமும் ஈரானை இஸ்ரேல் தாக்கும் அபாயம் உருவானது. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள், எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் குறி வைப்பதாக அச்சம் எழுந்தது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் ஈரானின் உச்ச தலைவர் கமெனியை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. உடனடியாக கமெனி ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இருக்கும் இடத்தை சுற்றி ஏவுகணை தடுப்பு கவசத்தை நிலை நிறுத்தி அரண் அமைத்தது ஈரான். இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 25 நாட்கள் கழித்து ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் படலத்தை இப்போது துவங்கி இருக்கிறது இஸ்ரேல். ஈரானின் ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் துல்லிய தாக்குதலை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக நள்ளிரவில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்து அதிகாலையில் அடுத்த ரவுண்ட் தாக்குதல் நடந்தது. இஸ்ரேலின் 10க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈரான் எல்லைக்குள் நுழைந்து சரமாரியாக குண்டு வீசின.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை