தாக்குதல் தீவிரமானதால் இஸ்ரேலில் அவசர நிலை Israeli jets strike| Lebanon Hezbollah |Netanyahu
இஸ்ரேல் - காசாவின் ஹமாஸ் இயக்கம் இடையே ஏற்கனவே போர் நடக்கிறது. இச்சூழலில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதட்டம் அதிகரித்து உள்ளது. ஹிஸ்புல்லாவின் கமாண்டர் ஃபவத் ஷுக்ர் Fuad Shukr கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது. ஞாயிறன்று, இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. சுமார் 300க்கு மேற்பட்ட ராக்கெட்கள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேலின் அயர்ன் டோம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு, அவற்றை நடுவானில் இடைமறித்து அழித்தது. இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லாக்களின் 40க்கு மேற்பட்ட ஏவுதள பகுதிகளை குண்டு வீசி அழித்தது. இதில் ஆயிரக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லாக்கள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தனர். அதை முன்கூட்டியே கண்டறிந்து தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியது.