/ தினமலர் டிவி
/ பொது
/ தேடப்பட்டு வந்த குவாரி ஓனர் போலீசில் சரண் | Jagbar Ali Case | CBCID | Pudukkottai
தேடப்பட்டு வந்த குவாரி ஓனர் போலீசில் சரண் | Jagbar Ali Case | CBCID | Pudukkottai
புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி வயது 58. திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடந்த கனிம கொள்ளைக்கு எதிராக போராடி வந்தார். இந்த சூழலில் கடந்த 17ம் தேதி பைக்கில் செல்லும் போது லாரி மோதி இறந்தார். இதன் பின்னணியில் சதி உள்ளதாக அரசியல் தலைவர்கள் முதல் பலரும் கண்டன குரல் எழுப்பினர். ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரித்தனர். குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி ஓனர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேர் கைதாகினர்.
ஜன 23, 2025