/ தினமலர் டிவி
/ பொது
/ சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் என்கவுன்டர் Jharkhand encounter| Anti Naxal Operation | CRP
சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் என்கவுன்டர் Jharkhand encounter| Anti Naxal Operation | CRP
ஜார்க்கண்ட்டின் பொகாரோ மாவட்டம் லுகு மலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் நக்சல்களை ஒடுக்கும் பணியில், சிஆர்பிஎப் மற்றும் அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில், நக்சல் முக்கிய தலைவ் குன்வர் மாஞ்சி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுப்படிருந்த நிலையில், அவரது தலைக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. துப்பாக்கி சண்டையில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் இறந்தனர். ஜார்க்கண்ட் காட்டுக்குள் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தொடர்வதாக டிஜிபி அனுராக் குப்தா கூறினார்.
ஜூலை 16, 2025