உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சரியான நேரத்தில் கவனித்த வனத்துறைக்கு பாராட்டு! | Jharkhand | Bhupender Yadav | Elephant

சரியான நேரத்தில் கவனித்த வனத்துறைக்கு பாராட்டு! | Jharkhand | Bhupender Yadav | Elephant

ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு நிலக்கரி எடுத்து செல்லும் ரயில்களுக்காக பார்க்கானா மற்றும் ஹசாரிபாக் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது அடர்ந்த வனப்பகுதி. இன்று அதிகாலை யானை ஒன்று பிரசவ வலியில் தண்டவாளத்திற்கு அருகே சிரமப்பட்டு கொண்டிருந்தது. இதைக்கண்ட வனத்துறை அதிகாரி ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த வழியில் சரக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் இருந்த யானை குட்டி ஈன்றது. தாயும், சேயும் பத்திரமாக தண்டவாளத்தில் இருந்து சென்றபிறகே ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !