/ தினமலர் டிவி
/ பொது
/ குடியிருப்பில் குபுகுபுவென புகுந்த 3 ஏரிகளின் உபரி நீர் | Jolarpet | Lake | Rain
குடியிருப்பில் குபுகுபுவென புகுந்த 3 ஏரிகளின் உபரி நீர் | Jolarpet | Lake | Rain
மழை வந்தாலே பதற்றமா இருக்கு வீட்டுக்குள் என்னென்னமோ வருது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள 3 ஏரிகள் நிரம்பியது. ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் அங்குள்ள நந்தினி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. வீடுகள், அருகில் இருந்த விவசாய நிலங்களில் வெள்ளம் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. முறையாக வடிகால் அமைத்து இருந்தால் இப்படி குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது. மூன்று ஏரிகளின் உபரி நீர் வெளியேறும் வகையில் ஏற்கனவே உள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும்.
டிச 03, 2024