/ தினமலர் டிவி
/ பொது
/ உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம் | Kallakurichi | Ulundurpet
உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம் | Kallakurichi | Ulundurpet
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகரை சேர்ந்தவர் முத்து, வயது 53. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்தார். குடும்பத்துடன் என்எல்சி தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்தார். இந்த சூழலில் இன்று காலை இவர், அஜீஸ் நகர் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை அப்பகுதியினர் கண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
பிப் 12, 2025