கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களில் உடைந்த மர்மம்
கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கில், கண்ணுக்குட்டி அவரது சகோதரர் தாமோதிரன் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் ஜாமினில் வெளியே சென்றனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இவர்கள் இருவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்தபோது, கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன் பள்ளிவாசல் அருகே ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தார். அவர், கடலூர் வேப்பூர் அடுத்த நிராமணி கிராமத்தை சேர்ந்த 70 வயதான தங்கராசு என்பது தெரிந்தது. பெங்களூரில் மரசிற்ப வேலை செய்து வந்த அவர், சின்னசேலத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தபோது இறந்தது தெரிந்தது.
பிப் 27, 2025