/ தினமலர் டிவி
/ பொது
/ விலங்கு வேட்டையை தடுக்க சென்ற அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு Man shot at forest officer kallakurich
விலங்கு வேட்டையை தடுக்க சென்ற அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு Man shot at forest officer kallakurich
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள பாக்கம்பாடி, குரால் ஆகிய பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. காட்டுப்பகுதியில் உள்ள முயல், மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் 2 ஆசாமிகள் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தனர். அப்போது, அவ்வழியாக கிருஷ்ணாபுரம் வனக்காப்பாளர் வேல்முருகன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். 2 பேர் கையில் துப்பாக்கியுடன் நிற்பதை பார்த்தனர். வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
மார் 22, 2025