உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருபுவனம் போல் கள்ளக்குறிச்சி சம்பவம்; காவல்துறை நடவடிக்கை

திருபுவனம் போல் கள்ளக்குறிச்சி சம்பவம்; காவல்துறை நடவடிக்கை

சிவகங்கை, திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கள்ளக்குறிச்சி, கனங்கூர் கிராமத்தை சேர்ந்த விக்கி என்ற இளைஞர், கடந்த மாதம் கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்தும், தமது சித்தப்பா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் போலீசார் அந்த இளைஞரை தாக்கி உள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆன நிலையில், கச்சிராயபாளையம் காவல் நிலைய முதல்நிலை காவலர் மணிகண்டன் கள்ளக்குறிச்சி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், மற்ற போலீசாரின் செயல்படுகள் பற்றி விசாரிக்க டிஎஸ்பிக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, கள்ளக்குறிச்சி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை