/ தினமலர் டிவி
/ பொது
/ வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்றது அம்பலம்! Kanja Arrest | Hosur | Bangalore
வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்றது அம்பலம்! Kanja Arrest | Hosur | Bangalore
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக கெலமங்கலத்துக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒசூர் மதுவிலக்கு போலீஸார் பைரமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக பைக் வந்த ஜோடியை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். பைக்கை சோதனை செய்த போது சீட்டுக்கு அடியில் 8 கிலோ கஞ்சா சிக்கியது. இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தாசிரிப்பள்ளியை சேர்ந்த கட்டட தொழிலாளி ஆனந்தன், அவரது மனைவி ராணி என்பது தெரிந்தது.
ஜன 09, 2025