850 பேரின் லிஸ்ட் ரெடி; அடுத்த நடவடிக்கை என்ன?
வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தழிகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. போதை புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, போதை பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இணைத்து, அமலாக்கப் பணியம் - குற்றப் புலனாய்வு துறை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
செப் 18, 2024