/ தினமலர் டிவி
/ பொது
/ வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தப்பி செல்லும் காட்சி! | Kanyakumari | Theft | Viral CCTV
வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தப்பி செல்லும் காட்சி! | Kanyakumari | Theft | Viral CCTV
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சலீம். பக்ரைன் நாட்டில் பணி புரிகிறார். புத்தாண்டு விடுமுறைக்கு குடும்ப உறுப்பினர்களையும் சலீம் அழைத்து இருந்தார். வீடு பூட்டப்பட்டு இருந்ததை நோட்டம் போட்ட ஆசாமிகள் நேற்று நள்ளிரவு சலீம் வீட்டுக்குள் புகுந்தனர். பாதுகாப்பிற்காக வீட்டை சுற்றிலும் வீட்டுக்கு உள்ளேயும் சலீம் சிசிடிவி கேமரா பொருத்தி இருந்தார். நேற்று இரவு தற்செயலாக சிசிடிவி காட்சிகளை செல்போன் வழியாக பார்த்த போது 2 பேர் கையில் இரும்பு கம்பியுடன் வீட்டில் நடமாடியது தெரிந்தது. வீட்டின் அருகில் உள்ள உறவினர்களை அலர்ட் செய்து நடந்த சம்பவத்தை சலீம் கூறினார்.
ஜன 01, 2025