புறக்காவல் நிலையத்தில் போலீஸ்-உறவினர்கள் சண்டை | karaikkal beach | lovers | karaikkal police fight
கழுத்துல தாலி இருக்கா? ஷாலை எடு பார்க்கலாம் ஜோடியிடம் ஜிபேயில் ரூ.3000 வசூலித்த போலீஸ் காரைக்கால் கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காதல் ஜோடிகளும் அதிகளவில் வருவர். இரு தினங்களுக்கு முன் கடற்கரைக்கு வந்த ஒரு காதல் ஜோடியிடம் காரைக்கால் கடலோர காவல் நிலைய போலீஸ்காரர் ராஜ்குமார் விசாரித்தார். பிறகு, கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்துச் சென்றார். இளைஞரை வாட்டர் பாட்டில் வாங்கி வரச் சொல்லிவிட்டு இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளார். கழுத்துல தாலி இருக்குதா? ஷாலை எடுத்து காட்டு என கூறியுள்ளார். இளம்பெண் தயங்கவே இல்லன்னா நானே எடுத்து பார்க்கவா? என கேட்டதாக கூறப்படுகிறது. கடற்கரையில் ஒழுங்கீனமாக இருந்ததாக வழக்கு போட்டு விடுவேன் என ஜோடியை மிரட்டி 3000 ரூபாயை ஜிபே மூலம் வசூல் செய்துள்ளார். இதையறிந்த காதல் ஜோடியின் உறவினர்கள் புறக்காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.