விடுமுறையில் ஊருக்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் Karur crime| karur
கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெருவை சேர்ந்தவர் ஜீவா. வயது 20. திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 22ம் தேதி வெளியில் சென்ற ஜீவா, அதன் பின் திரும்பி வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடினர். அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், வடக்கு காந்திகிராமம் EB காலனியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் போதையில் ஜீவா வீட்டுக்கு வந்துள்ளார். உன் மகனை நாங்கள் தான் போட்டு தள்ளினோம் என்று உளறியிருக்கிறார். சசிக்குமாருக்கும், ஜீவாவுக்கும் ஏற்கனவே முன்பகை இருக்கிறது. இருவர் மீதும் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 28, 2024