கடத்தப்பட்ட பெண்ணின் அண்ணன் பரபரப்பு தகவல் | Karur | Love | Police
கரூர் நல்லமுத்துபாளையத்தை சேர்ந்தவர் கணபதி, வயது 21. பொரணியை சேர்ந்தவர் சதயவர்த்தினி. வயது 19. இருவருக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். கணபதி படிப்பை பாதியில் கைவிட்டு பைனான்ஸ் வேலைக்கு போகிறார். சதயவர்த்தினி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை சென்றனர். நண்பர்கள் உதவியுடன் கோவை காந்திபுரத்தில் திருமணம் நடந்தது. அங்கே தங்கி இருந்த அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
ஜூன் 19, 2025