காவிரி நீர் திறப்பு குறைப்பு: அடக்கி வாசிக்கும் தமிழகம்! Kaveri Water Sharing | Tamilnadu | Karnatak
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், நீர் வழங்கும் தவணைக் காலம் துவங்கும். அதன்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.க்கு பதிலாக, 2.25 டி.எம்.சி. மட்டுமே, தமிழகத்துக்கு கிடைத்தது. ஜூலை முதல் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஜூலையில் 31.5 டி.எம்.சி.க்கு பதிலாக 96.5 டி.எம்.சி.யும், ஆகஸ்ட்டில் 45.9 டி.எம்.சி.க்கு பதிலாக, 78.3 டி.எம்.சி.யும் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்துக்கான நீர் திறப்பையும், கர்நாடகா குறைத்துள்ளது.