/ தினமலர் டிவி
/ பொது
/ 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை! Chennai Airport | Drug Mafia | Lady Arrest
2.2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை! Chennai Airport | Drug Mafia | Lady Arrest
ஆப்ரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். கென்ய நாட்டை சேர்ந்த 30 வயது இளம்பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவரை தனியாக அழைத்து சென்று சோதித்தனர். அவர் அணிந்திருந்த ஷூவில் கொக்கைன் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அவரது பைக்குள் இருந்த 5 ஜோடி ஷூக்களிலும் கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 2.2 கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரித்தனர்.
ஜூன் 27, 2024