உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாள் குறித்து தமிழக அரசை எச்சரித்த அண்ணாமலை | Annamalai | State president | BJP | Condemned | Kerala

நாள் குறித்து தமிழக அரசை எச்சரித்த அண்ணாமலை | Annamalai | State president | BJP | Condemned | Kerala

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நமது தென் மாவட்டங்கள் கேரளாவின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்த கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன. ஏற்கனவே காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது கேரளா எல்லையான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார். ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்துவதை கண்டும் காணாததுபோல் இருக்கிறது இந்த அரசு. இன்னொரு பக்கம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்கு தெரிந்தே நடக்கின்றன. கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதை திமுக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் ஜனவரி முதல் வாரத்தில் மக்களை திரட்டி, மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதை திமுக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !