பெண் டாக்டர் அம்மா உடைத்த அதிர்ச்சி உண்மை | kolkata woman doctor case | victim mother 1st interview
எங்க பொண்ணு இருந்த இடம் கொடூரனுக்கு எப்படி தெரிந்தது? பகீர் கிளப்பிய டாக்டர் அம்மா கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டு இருக்கிறான். இன்னும் பல மர்மங்கள் நிலவுகின்றன. இது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதும் தங்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்த விதம் பற்றி முதல் முறையாக பெண் டாக்டரின் அம்மா பேட்டி அளித்தார். மருத்துவமனை நிர்வாகம் தகவல் சொன்ன விதம், நேரில் கண்ட காட்சிகள், முதலில் கொல்கத்தா போலீஸ் விசாரித்த விதம், உடனுக்குடன் சடலத்தை எரித்தது என பல விஷயங்களில் சந்தேகம் கிளப்பி உள்ளார். மம்தா தங்களிடம் சொன்ன எதையும் செய்யவில்லை. மாறாக போராட்டத்தை ஒடுக்க பார்க்கிறார் என்றும் பெண் டாக்டரின் அம்மா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரது முதல் பேட்டி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தான் அவர் அளித்த முழு பேட்டி: