பிரதமர் மோடியிடம் டாக்டர்கள் கேட்பது என்ன? kolkata doctor death case IMA letter PM Modi 5 demands
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம் டாக்டர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 14ம்தேதி இரவு ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவமனையின் பல பகுதிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். பெண் டாக்டர் இறந்து கிடந்த இடத்திலும் நுழைந்து கும்பல் சூறையாடியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் போலீசுக்கு கொல்கத்தா ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் மருத்துவமனையில் டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.