/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் டாக்டர் உடலில் இருந்த திரவம்... உண்மை என்ன | kolkata woman doctor death | kolkata case fact
பெண் டாக்டர் உடலில் இருந்த திரவம்... உண்மை என்ன | kolkata woman doctor death | kolkata case fact
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த கொடூர காரியத்தை செய்ததாக சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். கொல்கத்தா போலீசிடம் இருந்து சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. கொடூரன் சஞ்சய் ராய் இப்போது சிபிஐ கஸ்டடியில் உள்ளான். அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சஞ்சய் ராய் தான் இந்த காரியத்தை செய்தான் என்பதற்கு போதுமான எவிடன்ஸ் உள்ளது. சம்பவத்தன்று இரவு பயிற்சி டாக்டர் செமினார் ஹாலில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்.
ஆக 18, 2024