சென்னை இளைஞர்களுக்கு தஞ்சையில் நடந்த சோகம் | Kollidam River | Thirukkattupalli
அடுத்தடுத்து மூழ்கிய 5 நண்பர்கள் கோரமாக விழுங்கிய கொள்ளிடம்! டிஸ்க்: சென்னை எழும்பூர் நேரு பார்க் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன்கள் பிராங்கிளின், ஆண்டோ மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர், கலையரசன், மனோகரன் ஆன்மீக சுற்றுலா சென்றனர். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோயிலுக்கு போன அவர்கள் அங்கே கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர். அப்போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்து ஒவ்வொருவராக ஆற்றில் மூழ்கினர். கரை ஓரமாக நின்றிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுற்றுலா வந்த 5 பேரில் ஒருவர் கூட கரைக்கு திரும்பவில்லை. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் ஆற்றில் இறங்கி தேடியதில் கலையரசன், கிஷோர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மாயமான பிராங்கிளின், ஆண்டோ, மனோகரனை தேடும் பணி நடந்தது.