கூவாகம் தேரோட்டத்தில் திரண்ட திருநங்கைகள் | Koovagam temple | Chithirai festival | Chariot | Transg
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திர திருவிழா கடந்த 29ம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் அரவாண் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கீரிமேடு கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புஜம், மார்பும், நத்தம் கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கை, கால்களை 21 அடி உயர தேரில் பொருத்தினர். தொடர்ந்து அரவான் சிரசு, கோயிலை சுற்றி வலம் வந்து தேரில் பொருத்தப்பட்ட நிலையில் மகா தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது திருநங்கைகள் சூர தேங்காய்களை உடைத்து கற்பூரம் ஏற்றி