உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு! Kovai girl case

கோவையில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு! Kovai girl case

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பள்ளப்பாளையத்தில் வசித்த தம்பதிக்கு, 10 வயது மகளும், 5 வயது மகனும் இருந்தனர். இவர்கள் ஒரு மாதத்துக்கு முன், போத்தனுாரில் இருந்து மாறி, பள்ளப்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியேறினர். மே 21ம் தேதி மாலை, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூலுார் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிறுமியை பைக்கில் கடத்தி சென்ற நபரை, 22ம் தேதி காலை போலீசார் அடையாளம் கண்டனர். அந்த நபர், சிறுமி குடியிருக்கும் வீட்டுக்கு, பக்கத்து வீட்டில் குடியிருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம், வாளவாடியை சேர்ந்த கார்த்தி, என்பது தெரிந்தது.

மே 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை