பொன்னான வாய்ப்பு தந்தது 'தினமலர்' kovai vizha | dinamalar
கோவை விழாவையொட்டி, வீடுகளில் கோலமிட்டு விளக்கேற்றி கொண்டாட தினமலர் நாளிதழ் அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று, மாநகரின் பல இடங்களில் அபார்ட்மென்ட்கள், வீடுகளில் கோலமிட்டு கோவை விழாவை மக்கள் வரவேற்றனர். நேரு நகர் மவுண்ட் ரெயின் டிராப் அபார்ட்மென்டில், பெண்கள் தங்கள் கைவண்ணத்தில் பிரம்மாண்ட கோலம் வரைந்திருந்தனர். காவி பின்னணியில் பாரம்பரியமான சிக்கு கோலமிட்டு, பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். கோவை விழா கோலாகலம் என எழுதி, வாங்கங்கோ என கொங்குச் சொல்லாடலில் வரவேற்று இருந்தனர்.
நவ 23, 2024