உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவில்பட்டியில் போலீஸ் குவிப்பு: இரவோடு இரவாக அதிர்ச்சி | Kovilpatti | Police

கோவில்பட்டியில் போலீஸ் குவிப்பு: இரவோடு இரவாக அதிர்ச்சி | Kovilpatti | Police

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், வயது 20. டிரைவர் வேலை செய்கிறார். ஞாயிறன்று இரவு கடலையூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரிடம் தகராறு செய்துள்ளது. திடீரென பிரகதீஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். உடல் முழுவதும் வெட்டு காயங்கள் விழுந்து பிரகதீஸ்வரன் ஸ்பாட்டிலேயே இறந்தார். கோவில்பட்டி கிழக்கு போலீஸார் அவரது உடலை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் செண்பா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி எனபவர் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை