/ தினமலர் டிவி
/ பொது
/ திடீர் மண் சரிவால் மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்கள் | Landslide | Construction site | 3 Workers | Hy
திடீர் மண் சரிவால் மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்கள் | Landslide | Construction site | 3 Workers | Hy
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. அண்டர் கிரவுண்ட் அமைக்க பில்லர் அமைப்பதற்காக அதிக ஆழம் தோண்டப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். அவர்களை மீட்க சக தொழிலாளர்கள் நீண்ட நேரமாக போராடியும் முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், ஜேசிபி உதவியுடன் 3 பேரையும் சடலமாக மீட்டனர்.
பிப் 05, 2025