பல்கலைக்கழகம் அலட்சியமாக செயல்படுவதாக மாணவர்கள் கொதிப்பு! Law College result | Pondicherry
புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களின் மூன்றாம் ஆண்டு தேர்வு முடிவை பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் தேர்வு எழுதிய 59 மாணவர்களில் 16 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். நன்றாக தேர்வு எழுதிய மாணவர்கள் கூட தோல்வி அடைந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மாணவர்கள் பலர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இதனை ஏற்ற பல்கலைக்கழகம் முந்தைய தேர்வு முடிவுகளை திரும்ப பெற்று புதிய முடிவுகளை வெளியிட்டது. அதில் ஏற்கனவே பாஸாகி இருந்த 16 மாணவர்களில் 10 பேர் தோல்வி அடைந்தனர். பெயிலானதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் பலர் வெற்றி பெற்றனர். பல்கலைக்கழக அதிகாரிகளின் அலட்சியத்தால் உச்சகட்ட குழப்பம் நேர்ந்ததாக மாணவர்கள் கொதிப்படைந்தனர். குழப்பத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.