மாலேகான் வழக்கில் விடுதலை; சொந்த ஊரில் தடபுடல் வரவேற்பு Lt. Colonel Prasad | Acquittal | Pune Welco
2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட் ஜூலை 21ல் விடுதலை செய்தது. விடுதலைக்கு பிறகு தனது சொந்த ஊரான புனேவுக்கு வந்த கர்னல் பிரசாத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தும், மேளங்கள் கொட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்தவர்கள் கர்னல் பிரசாத் இந்த வழக்கில் பழி வாங்கப்பட்டதாக தெரிவித்தனர். வேனில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட கர்னல் பிரசாத் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஹனுமன் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். புனே மக்கள் என்னை எப்போதும் வரவேற்க தயாராக இருந்தனர். நான்தான் அவர்களிடம் வழக்கில் இருந்து முழு விடுதலை பெற்ற பிறகே புனே வருவேன் என கூறி இருந்தேன். விடுதலை தீர்ப்புக்கு பிறகு வரவேற்பு அளிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர். வேண்டாம் என என்னால் சொல்ல முடியவில்லை என்றும் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் கூறினார்.