/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தாமதம்: போலீசுக்கு ஐகோர்ட் கொடுத்த அதிர்ச்சி Madras high court quashed Goond
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தாமதம்: போலீசுக்கு ஐகோர்ட் கொடுத்த அதிர்ச்சி Madras high court quashed Goond
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தன் வீட்டின் அருகே மர்ம ஆசாமிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் அதிமுக, பாஜ, திமுக வைச்சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஆக 06, 2025