/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி madurai aiims|madurai high court
மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி madurai aiims|madurai high court
மதுரை தொப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு இன்று விசாரித்தது. மத்திய அரசு வக்கீல் வாதிடும்போது, எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026க்குள் பணிகள் முடிந்துவிடும். இடையில் கொரோனா பரவல் காரணமாக தாமதம் ஆகிவிட்டது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும், ஒரு காரணத்தை சொல்கிறீர்களே ஏன் என்று கேட்டனர்.
ஆக 29, 2024