/ தினமலர் டிவி
/ பொது
/ மீனாட்சி அம்மன் முடிசூட்டு விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் madurai meenakshi temple| chithirai fes
மீனாட்சி அம்மன் முடிசூட்டு விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் madurai meenakshi temple| chithirai fes
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆறுகால் பீடத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு, பரிவட்டம் கட்டி, ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடம் சூட்டப்பட்டு, செங்கோல் வழங்கி அரசியாக முடிசூட்டப்பட்டது. மீனாட்சிக்கு உகந்த வேப்பம்பூ, மகிழம்பூ மாலை அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மே 06, 2025