/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளி வரும் வழியில் எரிந்த பஸ்: 24 குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் | Madurai School Bus Fire
பள்ளி வரும் வழியில் எரிந்த பஸ்: 24 குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் | Madurai School Bus Fire
மதுரை, திருமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ் இயக்கப்படுகிறது. இன்று காலை ஆலம்பட்டி, திரளி, கிழவனேரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 24 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் கிளம்பியது. விருதுநகர் - மதுரை ஹைவேசில் வந்த போது இஞ்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் ரவிச்சந்திரன் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
நவ 21, 2025