போலீஸ் பேச்சை மீறி வெள்ளத்தில் பாய்ந்த கார் | Madurai | Car Under Bridge
மதுரையில் சனிக்கிழமை இரவு இடி மின்னலுடன் கனமழை தொடர்ச்சியாக பெய்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மணி நகரம் ஒர்க்ஷாப் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியது. பாலத்தை கடக்க சென்ற போலீஸ் வாகனம் வெள்ளத்தில் சிக்கியது. காருக்குள் இருந்த போலீசார் வெள்ள நீரில் நீந்தி தப்பினர். அப்போது திடீரென அதே வழியாக வந்த இன்னொரு கார் வெள்ளத்தில் இறங்கியது. போக வேண்டாம். கார் மூழ்கிவிடும் என போலீசார் காத்தியும் கேட்டாமல் கார் முன்னோக்கி சென்றது. வெள்ள நீரில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தது. காருக்குள் சிக்கி இருந்த மூன்று பேரை போலீசார் நீந்தி சென்று மீட்டனர்.
அக் 13, 2024