/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை சர்ச்சில் மோதல்: நடந்தது என்ன? பரபரப்பு தகவல் Madurai CSI Church Financial issue police
மதுரை சர்ச்சில் மோதல்: நடந்தது என்ன? பரபரப்பு தகவல் Madurai CSI Church Financial issue police
மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. போதகர் ராஜா ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்றனர். பிரார்த்தனை இறுதியில் தேவாலய வரவு, செலவு கணக்கு விவரங்களை போதகர் விளக்கிச் சொன்னார். அப்போது, தேவாலய நிர்வாகிகளுக்கும், முன்னாள் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தள்ளி விட்டுக் கொண்டனர். பிரார்த்தனைக்காக வந்த பங்கு மக்கள் அதிர்ச்சியடைந்து, சர்ச்சை விட்டு கிளம்பினர்.
நவ 06, 2024