மகளிர் உரிமைத்தொகை: அலையவிட்ட 'மெசேஜ்'
இல்லத்தரசிகளுக்கு தமிழக அரசு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பரவியது. உரிமைத்தொகை பெறாதவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் உடனே ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதற்காக 3 நாட்கள் முகாம் நடப்பதாக அதில் சொல்லப்பட்டு இருந்தது. இதை நம்பி பல்வேறு மாவட்ட கலெக்டர் ஆபீஸ்களில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக 17, 2024