மம்தாவுக்கு நெருக்கடி கவர்னர் போஸ் அதிரடி | Mamata Banerjee | Kolkata case | Governor Ananda Bose
பெண் டாக்டர் சம்பவம் கவர்னர் போட்ட உத்தரவு கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பல குளறுபடிகளை செய்த மேற்கு வங்க அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நேற்று நடந்த மாணவர்களின் கண்டன பேரணியில் கொல்லப்பட்ட டாக்டரின் பெற்றோர் கலந்துகொண்டு மேற்கு வங்க அரசு, கொல்கத்தா போலீஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேற்கு வங்க அரசும் போலீசாரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆரம்பம் முதலே போலீசார் ஆதாரங்களை அழிக்க முயன்றனர். நீதி கிடைக்கும் வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட டாக்டரின் தாயார் கூறினார். தொடர் போராட்டங்களால் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதி அவ்வளவு எளிதில் கிடைக்காது என தெரியும். நாம் அனைவரும் சேர்ந்து நீதியை உறுதிசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மக்கள் பலம் எங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறேன் என்று டாக்டரின் தந்தை தெரிவித்தார்.