மம்தா பானர்ஜி காரை சூழ்ந்து கற்கள் வீச்சு! மேற்கு வங்கத்தில் பரபரப்பு!
மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் பிர்ஜு கியோட் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முன்னாள் முதல்வர் மம்தா அங்கு சென்றிருந்தார். அப்போது, அவரது காரை சிலர் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். கற்கள் மற்றும் சேற்றை எடுத்து காரின் மீது வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஆக 09, 2026