உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு விவசாயி கவுரவம் Mango Man| Operation Sindhoor Mango| | Bihar

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு விவசாயி கவுரவம் Mango Man| Operation Sindhoor Mango| | Bihar

பீகாரின் பாகல்பூரை சேர்ந்தவர் விவசாயி அசோக் சவுத்ரி. மாம்பழ உற்பத்தியில் பல்வேறு புதிய ரகங்களை அறிமுகம் செய்தவர். ஓட்டு ரகங்களில் புதுப்புது வகையான மாம்பழங்களை உருவாக்கியவர் என்பதால், இவரை மேங்கோ மேன் என அழைக்கின்றனர். இவர் உருவாக்கி உள்ள புதிய ரக மாம்பழத்திற்கு ஆபரேஷன் சிந்துார் என பெயரிட்டுள்ளார். இது பற்றி அசோக் சவுத்ரி கூறும்போது, சிந்துாரா மற்றும் பிஜு வகை மாம்பழங்களை இணைத்து புதிய ரக ஒட்டு மாம்பழத்தை உருவாக்கினேன். அது மிகவும் இனிப்பாகவும், சுவை மிகுந்ததாகவும் இருந்தது. பயங்கரவாதிகளை அழித்து நம் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில், அந்த மாம்பழ வகைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டி உள்ளேன் என்றார்.

ஜூன் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !