/ தினமலர் டிவி
/ பொது
/ மன்னார்குடியில் பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Man attack Girl | Force to married
மன்னார்குடியில் பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Man attack Girl | Force to married
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - ரேவதி தம்பதி. இவர்களின் 2வது மகள் 24 வயது வசந்தபிரியா மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பில் படிக்கிறார். தந்தையின் அக்கா மகனான 26 வயது மகாதேவனும் வசந்த பிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இடையில் மகாதேவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் இரு வீட்டாரும் எதிர்க்காத போதும், வசந்த பிரியா அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். பிறகு இரு தரப்பிலும் திருமணம் செய்ய வேண்டாம் என முடிவு செய்துவிட்டனர்.
டிச 10, 2024