கிண்டி நில அபகரிப்பு வழக்கில் திருப்பம் Minister Ma Subramanian| land-grabbing case| high court verd
சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்த காலத்தில், சென்னை கிண்டி, தொழிலாளர் காலனியில் கண்ணன் என்பவரின் வீட்டை, அதிகார துஷ்பிரயோகம் செய்து போலி ஆவணம் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயரில் மாற்றிக்கொண்டதாக புகார் எழுந்தது. 2016 தேர்தலில் மா. சுப்பிரமணியனை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதாப்பேட்டை பார்த்திபன் இது தொடர்பாக போலீசில் அளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில், மா.சுப்பிரமணியன், மனைவி காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐகோர்ட்டில் முறையிட்டார். நீதிபதி வேல்முருகன் வழக்கை விசாரித்தார்.