காங் தலைமை எதிர்ப்பை மீறி மோடிக்கு புகழாரம் சூட்டும் சசிதரூர்Modi|asset for India|shashi tharoor
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்தித்தது. அதற்காக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை வெகுவாக பாராட்டினார். மத்திய அரசு அமைத்த அனைத்துக் கட்சி குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கி விட்டு நாடு திரும்பின. ஒரு குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி அவரது பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. மத்திய அரசே அவரை தேர்வு செய்து அனுப்பி வைத்தது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூரை விமர்சித்தனர். ஆனால் மத்திய அரசு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து சசிதரூர் நாடு திரும்பினார். அமெரிக்கா, கொலம்பியா உள்பட 5 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.