டெல்லியை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் ஆம் ஆத்மி Delhi Election | Modi Speech at Dwarka | BJP| AAP| Kejri
டில்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. துவாரகா பகுதியில் பாஜ பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றினார். ஆம் ஆத்மி தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் டில்லி மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்கு டபுள் இஞ்ஜின் அரசு இல்லாததால், டில்லியின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஆம் ஆத்மி அரசு மத்திய அரசு நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில்லை. ஏழைகளுக்காக மத்திய அரசு கட்டித்தந்த ஏராளமான வீடுகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. டில்லியில் காற்று மாசு ஏற்படும் போதெல்லாம் ஹரியானா விவசாயிகளை குறை கூறுவர். தற்போது யமுனை நதியை மாசுபடுத்திவிட்டு, ஹரியானா மக்கள் மீது பழி போடுகின்றனர்.